இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் கடக ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்தப் 2018 ஆண்டு, சச்சரவுகள் இல்லாத ஆண்டாக அமையப் போகிறது. நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் தேடி வரப்போகிறது. உடல்நலம் சீராக இருக்கும். மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்கும். குடும்ப கௌரவம் உயரும். தன வரவு உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் பகை மாறும். அடுத்தவருக்கு வெளியில் கைமாற்றாக வாங்கி கொடுத்த பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் அமைப்பு உருவாகும். பழைய வண்டி, வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பப் பெரியோர்களின் ஆலோசனை கிடைக்க பெறுவீர்கள். பொதுவாகவே பொருளாதார நிலை சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாகக் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். நீங்கள் சிந்தனை வளம் மிக்கவர்களாக இருப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். நல்ல குடும்பம் அமையும். உங்கள் பிடிவாதக் குணத்தை கொஞ்சம் தளர்த்தி கொண்டால் வாழ்வில் பெரியளவில் வெற்றி பெறலாம். உற்றார், உறவினர்கள் கூட உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர். தொழிலில் இதுவரை ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உடன் இருப்பவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் வந்து சேரும். பணியில் இருந்த அல்லல்கள் அகலும். இந்த ஆண்டு எதிரிகளின் பலம் குறைவாகவே இருக்கும். அதிக முயற்சி எடுத்தே ஒரு சில காரியங்களை முடிக்க நேரிடும். அதே நேரத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பணி நிரந்தரம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு அது நிரந்தரமாகும். கூட்டாளிகளிடம் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. எந்தத் தொழில் செய்தாலும் உங்கள் மேற்பார்வையிலேயே வைத்துக்கொள்வது நல்லது, அப்பொழுதுதான் லாபத்தைக் கைப்பற்றிக் கொள்ள இயலும். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகலாம், ஆகையால் அவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி கிடைக்கும். பெற்றோர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். வாழ்க்கைத் துணையோடு ஒற்றுமையாக செயல்பட்டால், குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனை முக்கிய சமயத்தில் கிடைக்கும். மற்றவர்களின் துணையோடு, புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்வீர்கள். சுப விரயங்கள் அதிகரிக்கும். பாதியில் நின்றிருந்த கட்டிடப் பணி தொடரும். வெளிநாட்டு தொடர்பு அனுகூலம் தரும். விலகிச் சென்றவர்கள், மீண்டும் உங்களை நாடி வருவர். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். சந்தர்ப்பங்களைச் சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். முக்கிய காரியங்களில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உங்கள் செல்வாக்கு நிலை உயரும். வெளிநாட்டுப் பயணம் எண்ணியபடி வாய்க்கும். வாழ்க்கைத் துணையோடு சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும்.
தெய்வ வழிபாட்டில் முழுமையாக கவனம் செலுத்தினால் வரும் துயரங்கள் ஓரளவாவது குறையும். எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த வழி. பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் வராகியை வணங்கி வழிபடவும். முக்கிய குறிப்பு : இந்த 2018-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831